Neeraadum Kangal

Neeraadum Kangal Song Lyrics In English


நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ

காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது
நிம்மதி ஏது

நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ


இனம் அறியாமல் நான் இருந்தேனே
மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே

நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ