Ninaithaal Inikkum |
---|
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
தேடி வரும் எனை நாடி வரும்
பெரும் செல்வம் யோகம் சேரும்
தேன் கமழும் மணமாலை தரும்
என் சிந்தையில் இன்பம் நேரும்
தேடி வரும் எனை நாடி வரும்
பெரும்செல்வம் யோகம் சேரும்
தேன் கமழும் மணமாலை தரும்
என் சிந்தையில் இன்பம் நேரும்
ராணியைப் போலே வாழுவேன்
நாடியதெல்லாம் வாங்குவேன்
மாநில வாழ்வே ஆனந்தமென்று
கானம் பாடி ஆடுவேன்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
கோடையில் குளிர் வாடை தரும்
கொடைக்கானலில் வாசம் செய்வேன்
கொஞ்சிடுவார் எனைக் கொஞ்சிடுவார்
பொய்க் கோபம் ஊடல் கொள்வேன்
கோடையில் குளிர் வாடை தரும்
கொடைக்கானலில் வாசம் செய்வேன்
கொஞ்சிடுவார் எனைக் கொஞ்சிடுவார்
பொய்க் கோபம் ஊடல் கொள்வேன்
நாளொரு புதுக்கார் மாற்றுவேன்
நான் மிக ஜோராய் ஓட்டுவேன்
மாநில வாழ்வே ஆனந்தமென்று
கானம் பாடி ஆடுவேன்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்
நினைத்தால் இனிக்கும் சுபதினம்