Poda Poda Ellam Mayam |
---|
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வானவில் போலே வந்து போகும்
என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்
பெண்ணைக்
கண்டோடும் துறவிதான்
ஒரு பெண்ணில்
உண்டான பிறவிதான்
பெண்கள் இல்லாத பூமியா
ஒரு தேவி இல்லாத சாமியா
ஆசையாலே இன்று வாடினேனே
அமைதி எங்கே என்று பாடினேனே
தேடிடும் நிம்மதி தரும்
தேவியின் சன்னிதி
நாயகன் என் மனம் இனி
நாளெல்லாம் உன் வசம்
பாவைதான் சேவைதான்
காணக் காண கண்ணில்
ஊறும் தேனே
போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
அதன் ஜாலமும் கோலமும்
காண வா வா
போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்
கண்ணன் நீராடும் நதி இது
இரு கைகள் பட்டாலே நெளியுது
மன்னன் முத்தாடும் கனி இது
விரல் மெல்லத் தொட்டாலும் கனியுது
ஓடி வா வா
நெஞ்சில் ஊஞ்சல் ஆட
தேடி வா வா
இன்பத் தேரில் ஆட
ராத்திரி ஆனதும்
இந்த ராணியின் ஞாபகம்
ராகமும் தாளமும்
ஒன்று சேர்வதே கீர்த்தனம்
பாடலாம் கூடலாம்
காலம் தோறும் நீயும் நானும்தானே
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்
வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ
போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்