Annai Enbaval |
|---|
தாய்ப்பறவை தவிக்கவிட்டு
தந்தை உயிர் துடிக்க விட்டு
சேய்ப் பறவை தனை எடுத்துச்
செல்கின்றாயேஏஏ
பெரும் சிரமமின்றிப்
பிள்ளை பெற்ற பெரிய தாயே
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
அன்னை என்பவள் நீதானா
கூடப் பிறந்த குயில் என்று
நீ கொடுத்த செல்வம் பல உண்டு
மாறிவிட்டாயே நீ இன்று
மயங்குகிறாயே மகன் என்று
மயங்குகிறாயே மகன் என்று
அன்னை என்பவள் நீதானா
தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்
அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன
வாங்கிய தாய்க்கே மகன் என்றால்
அதை தாங்கிய தாயின் உறவென்னஆ
தாங்கிய தாயின் உறவென்ன
அன்னை என்பவள் நீதானா
காலம் கடந்து சென்றாலும்
கடலைக் கடந்து பறந்தாலும்
இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
அன்னை என்பவள் நீதானாநீ தானா