Avasarama Romba Avasarama |
---|
பாடலாசிரியர் : திலீப் குமார்
அவசரமா ரொம்ப அவசரமா இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா கல்யாணம் உடனே நடந்திடுமா
மலரொன்னு மலருது மயங்குதடி மனசுக்குள் நடக்குது சங்கீதம்தான் புது முகம் அடிக்கடி சிவக்குதடி புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்
கோழி ஒன்னு ஓடுது ஓடுது கூடாரம் போட்டு அமுக்குங்கடி கோடி வீட்டு பாட்டிய கேட்டு கும்மாளம் போட்டு குமுக்குங்கடி
அவசரமா ரொம்ப அவசரமா இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா கல்யாணம் உடனே நடந்திடுமா
காலம் முழுதும் மச்சானத்தான் முந்தான முடிச்சில வளச்சுக்கடி நாலு பொண்ணு பின்னால இருக்கு மனசுல அதையும் நெனச்சிக்கடி
நாளை வரும் மாப்பிள்ளைக்கு நாங்களெல்லாம் தங்கச்சி ஆளுக்கொரு சேலை கேட்போம் அப்பத்தான் நீ எதிர் கட்சி
பிள்ளை இல்லாத வீட்டில் வந்து துள்ளி குதிக்கட்டுமா புள்ள எல்லா பொறுப்பையும் ஏத்துக்கோடா நல்லா சுமக்கட்டும் ஆம்பள
சம்பந்தி ஆகும் அம்மாவின் முகத்தில் சந்தோஷ களைய பாருங்கடி
அவசரமா அவசரமா ரொம்ப அவசரமா இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா கல்யாணம் உடனே நடந்திடுமா
காஞ்சிப்பட்டு கட்டாயம் உண்டு கல்யாண பொண்ணே தெரிஞ்சுக்கடி காரைக்குறிச்சி நாயனத்தோட தஞ்சாவூர் தவிலும் அடிக்குமடி
தங்கக் காசு தொங்க தொங்க தாலி ஒன்னு செஞ்சாச்சு திண்டுக்கல்லு குண்டுமல்லி மாலை பின்ன வந்தாச்சு
மஞ்சள் செந்தூரம் தேகம் முழுதும் மைசூர் சந்தனம் பூசணும் கொஞ்சும் அத்தானின் மூக்கு மேலே குப்புன்னு வாசம் ஏறணும் நாள்தோறும் தேடி நீ பார்த்த தேதி நாளைக்குத்தானே தெரிஞ்சுக்கடி
அடிங்கடி அடிங்கடி மத்தாள மேளம் அக்காவுக்கு கல்யாணம்தான் அடிக்குது அடிக்குது சந்தோஷம் தாளம் கல்யாணப் பொண்ணு கண்ணோரம்தான்
மலரொண்ணு மலருது மயங்குதடி மனசுக்குள் நடக்குது சங்கீதம் தான் புது முகம் அடிக்கடி சிவக்குதடி புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்
வாழையோடு தோரணம் கட்டி கல்யாண தேதி கூறுங்கடி மாலை மாத்தும் நேரம் பார்த்து மச்சான வாழ்த்தி பாடுங்கடி