Keladi Kanmani

Keladi Kanmani Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆஹா ஆஹா

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி

எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான்
இசைத்தேனம்மா எனக்காக
நான் பாடும் முதல்
பாடல் தான்

கானல் நீரால்
தீராத தாகம் கங்கை
நீரால் தீர்ந்ததடி நான்
போட்ட பூமாலை மணம்
சேர்க்கவில்லை நீதானே
எனக்காக மடல் பூத்த
முல்லை

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி


நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா நான் வாடும்
நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா

ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது கால்போன
பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி