Kodaiyila

Kodaiyila Song Lyrics In English


கோடையில
மழை போல என் உயிரே
நீ இருக்க வாடையிலும்
அனலாக வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ

காரியம் நூறு
செய்து மண்ணில் வாழ்வது
பெரிது இல்லை உந்தன் காலடி
தடம் அறிந்து செல்லும் பாதைகள்
முடிவதில்லை

ஆலயம் தேடி
சென்று செய்யும் பூசைகள்
தேவை இல்லை உந்தன்
கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும்
வருவதில்லை

உறவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து
தொட இருள் எது ஒளி எதுவோ
ரெண்டு இருதயம் கலந்து விட

மாறிடும் யாவும்
இன்று சொல்லும் வார்த்தையில்
நெசமும் இல்லை உண்மை காதலை
பொருத்தமட்டில் எந்த மாற்றமும்
நிகழ்வதில்லை


ஆசைகள் தீரும்
மட்டும் கொள்ளும் அன்பினில்
அழகு இல்லை வெந்து போகிற
வேலையிலும் அன்பு தீ என்றும்
அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து
தொட இருள் எது ஒளி எதுவோ
ரெண்டு இருதயம் கலந்து விட

கோடையில
மழை போல என் உயிரே
நீ இருக்க வாடையிலும்
அனலாக வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ