Maatran Thootathu Maligaye |
|---|
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
உன்னை நெருங்க அடி வைத்தால்
என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தேனீல் விழுந்து மயங்கிடவே
என் இதயம் இதயம் பசித்திருந்தேன்
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னை தொடுவதும் சரிதானாஆஅஆஅ
நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா
உன்னை தொடுவதும் சரிதானா
எனும் பயமும் பயமும் உண்மையடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும்ஆஅ
நரகமே நிச்சயம் என்றாலும்
உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி