Mayangatha Mayangatha |
|---|
மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி
மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்
மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
தனியாளா நான் இருக்கேன்
வர வேணும் மகராசா
மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு காத்தடிச்சா
நான் வருவேன் மகராணி
வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வழி மேல கண்ணு வெச்சு
காத்திருக்கேன் மகராசா
தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு
தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு
காய்ச்ச மரம் மேலே இப்போ
கண்ணு பட்டு போனதம்மா
பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
சீலையிலே கூரப் பட்டு
தந்தவரே மகராசா