Nilavum Malarum

Nilavum Malarum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஏ எம் ராஜா

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே தோல்வி காணுமாஆஆ
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து
வைப்பதினால் காதல் மாறுமா

ஆண் மற்றும்
மனதினிலே பிரிவு இல்லை
மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்


ஆண் மற்றும்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து
முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து
மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் மற்றும்
மலர் முடிப்போம் மணம் பெருவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்

ஆண் மற்றும்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது