Ooru Sanam Thoongiruchu

Ooru Sanam Thoongiruchu Song Lyrics In English


ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே

ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம்
கூடலையே

ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே


மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில்
ஏறாதா

நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்

ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்

ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே