Pagai Konda Ullam |
|---|
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக
கூரையை எரிப்பாரோ
வேதனை தன்னை
விலை தந்து யாரும்
வாங்கிட நினைப்பாரோ
வாங்கிட நினைப்பாரோ
இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
வழக்குகள் முடிவாகும்
இருக்கின்ற பகையை
வளர்த்திடத்தானே
வாதங்கள் துணையாகும்
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வற்றிய குளத்தை பறவைகள் தேடி
வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது
உறவுகள் கிடையாது உறவுகள் கிடையாது
பாலைவனத்தில் விதைப்பதனாலே
பாலைவனத்தில் விதைப்பதனாலே
பயிர் ஒன்றும் விளையாது
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்
யாருக்கும் உதவாது
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்