Panpaadum Thaamaraiye |
|---|
பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்
எனக்கும் உன் மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்
கண்ணிலே போவது மின்னல்தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ
ஆஆஆஆஆனந்தமேவா வா
பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே
பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
இதற்கா சம்மதித்தேன்
உன் மனதை உயர்வாய் மதித்தேன்
அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்
பொங்கித்தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நானுன்னை மன்னித்தேனே
ஆஆஆஆஆனந்தமேவா வா
காமன் நிலா வந்தாடும் காதல் விழா
பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி