Sendhamizh Thenmozhiyaal |
|---|
சில்லென்று பூத்த
சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே
நின்றது போல் நின்றால்
நெடுந்தூரம் பறந்ததேன்
நிற்குமோ ஆவி
நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே
ஆஅஆஆஆஅஆஆஆஆ
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
ஆஆஅஆஆஆஆஅஆஅ
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்