Unakaaga Poojai Seidha |
|---|
உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ
எனக்காக பூஜை செய்த
பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த
பித்தனம்மா
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ
நாலிலொன்று நாணமென்று
நானறிந்த பாடமொன்று மறந்தே போகுமா
பாலிருக்கும் பாத்திரத்தை
நூலிருக்கும் ஆடை கொண்டு மறைத்தாலாகுமா
நள்ளிரவில் மெல்ல மெல்ல அள்ளியதென்ன
மன்மதனின் மந்திரத்தை சொல்லியதென்ன
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
எனக்காக பூஜை செய்த
உறங்காமல் ஆசை வைத்த
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ
வாலிபத்தின் லீலை காண காலையென்ன
மாலையென்ன அணைத்தேன் ஓடி வா
கால் நடக்கும் ஓவியத்தை கையணைக்க
மெய்யணைக்க துடித்தால் போட வா
கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா
கிட்ட வந்து அட்டையென ஒட்டிக் கொள்ளவா
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ