Vaanam Bhoomi

Vaanam Bhoomi Song Lyrics In English


பணத்துக்கோ பால் மயக்கம்
பசித்தவர்க்கோ கூழ் மயக்கம்
குணத்துக்கோ காலமெல்லாம்
குறையாத மதி மயக்கம்

மயக்கம் தெளிந்தவர்கள்
மனதார ஒன்று பட்டார்
விதி மயக்கம் தீராதோ
வீடொன்று அமையாதோ

வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

பிறக்கும்போது மனிதர்கள் ஒன்று
வளரும்போது மாறுவதுண்டு
காலம் நேரம் சூழ்நிலையாலே
கள்வன் வந்தான் பூமியின் மேலே



வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்


வயிறு பசித்தால் நல்லவன் திருடன்
வாழ்வை இழந்தால் மேதையும் குருடன்
இரண்டு வர்க்கம் இருக்கும் வரைக்கும்
இரண்டு குணங்களும் இருந்தே தீரும்



வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்



மனிதன் வாழ்க்கை மேகங்கள் போலே
சமூக வாழ்வோ சக்கரம் போலே
சென்ற காலம் அனுபவமாகும்
சேரும் நேரம் ஒளிமயமாகும்