Yaarukku Yaar Sondham Venbadhu

Yaarukku Yaar Sondham Venbadhu Song Lyrics In English


யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதேஏஏ
வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே

மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாம் துள்ளுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

வண்ண மலர் என்றும்
வண்டுக்குதான் சொந்தம்ம்ம்ம்ம்
வழங்கிடும் மதுவாலே
இரண்டுக்கும் ஆனந்தம்
ஆஆஆஆஓஓஓஓ

தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

கொத்துக் கிளிக்கேதான்
கோவைக்கனி சொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம்
வேறென்ன சொல்வது
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது


யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது