Nee Thaan Selvam Nee Thaan Amudham |
|---|
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீதான் எந்தன் உலகம்ம்ம்ம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே
வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே
கண்ணுக்குள் மணியாய்க்
கலந்தே நீ வாழ்க
மண்ணுக்கு புகழாய்
மகனே நீ வாழ்க
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு
தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு
பாட்டுக்குப் பொருளின்
நயத்தால் மதிப்பு
பசு மாட்டுக்குப் பிறந்த
கன்றால் மதிப்பு
கொடி தந்த பூவாய்
பூ தந்த மணமாய்
மடி மீது வளர்ந்தாய்
மகனே நீ வாழ்க
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்
கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்
பண் சேர்த்துப்
பாடும் பாட்டில் இருப்பாய்
நான் பார்க்கின்ற எதிலும்
நீ தான் இருப்பாய்
அன்புக்கு வடிவாய்
பண்புக்குப் பொருளாய்
இன்பத்தின் சுவையாய்
என்றென்றும் வாழ்க
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்