Ulagam Ariyatha Puthumai |
---|
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே
அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே
நிலையும் இழந்தேனே வினையும் அதனாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா
கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
இந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமையா விலை கேளுமையா
விலை கேளுமையா