Aalaliloo |
---|
ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் கண்ணே என
முத்தே என நீ கொஞ்சாத
உன் செல்ல துகள் இவள்
ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் சொல்லாமலே
சொல்லாமலே அம்மா
என்றுதான் உன்னை
அழைப்பவள்
நீ வீசிய புன்னகை
பின்னால் வருதோ கேள்வி
ஒன்றை நெஞ்சில் ஏந்தி
உன்னை பார்க்குதோ
காதல் அதை
சொல்லவே உயிர்
வேண்டாம் எனவே
காத்திருந்தேன்
பார்த்திருந்தேனே
காதலை சொல்லுதோ
உன் கண்ணில்
பட உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ
இங்கேது வழி இங்கேது மொழி
இல்லாத வழி முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ
உன் போல் அவள்
ஆவதே உன்னை உணர
போதவில்லை என்றுணர்ந்து
உன் காற்றாகிறாள்
நீ ஓய்வென
சாய்கையில் உன்
தூக்கம் அவளே உந்தன்
கனவில் தன்னை தேடி
பாதங்கள் தேய்கிறாள்
வண்ணங்கள் இல்லா
உன் சின்ன நிலா தன்னோடு
உலா வா என்றதோ தீ நின்ற
அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளே தன்னை
விதைக்குதோ மீண்டும்
உன்னை உதைக்குதோ