Aamanakku Thottathile |
---|
பாடல் ஆசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்
ஹாஆஅஆஅ
இருவர் :
ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா உங்கூட நான் வரவா
ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள வழுக்குதடி உன்னோட ஒடம்பு தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப
பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா காத்திருக்க வேணும் கலங்காதே ராசா
அடிக்குது காத்து ஹோய்ஹோய்ஹோய் அணைசுக்க சேத்து ஹோய்ஹோய்ஹோய்
துடிக்குது ஆச ஹோய்ஹோய்ஹோய் தடுக்குது வெட்கம் ஹோய்ஹோய்ஹோய்
இருவர் :
ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன் பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே
கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க
அடிக்குது காத்து ஹோய்ஹோய்ஹோய் அணைசுக்க சேத்து ஹோய்ஹோய்ஹோய்
துடிக்குது ஆச ஹோய்ஹோய்ஹோய் தடுக்குது வெட்கம் ஹோய்ஹோய்ஹோய்
இருவர் :
ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா உங்கூட நான் வரவா
ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான்