Aarariro Aarariro |
---|
இசை அமைப்பாளர் : தினா
ஆராரிரோஆராரிரோ
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ
ஆராரிரோஆராரிரோ
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
மடியில் விழுந்ததும் மலரை பறித்தது
விதியின் விளையாடலே
கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது
விடிந்தும் விடியாமலே
ஊமையின் பாடல் கேளாதோ
பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ
ஆராரிரோஆராரிரோ
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
வாசல் திறந்தது தெய்வம் நடந்தது
வார்த்தை வரவில்லையே
முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது
சொந்தம் எனக்கில்லையே
பாச யாசகம் தீராதோ
நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ
ஆராரிரோஆராரிரோ
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ
ஓஓஓஓஒ
ஓஓஓஓஒ
ஓஓஓஓஒ
ஓஓஓஓஒ