Accham Pisaasu Da |
---|
நும்கிளி உம்முயிர்
உள்ளூழல் நமனே
கங்குலின் அடர்மிகு
தங்கும் பூ தகமே
அகல் அதை அகல் ஒளி
அகத்தெழும் நிதமே
பயமறு பயமறு
வரும் இறை பதமே
அச்சம் பிசாசடா
அச்சம் பிசாசடா
அண்டிவந்தால் அதை
வச்சு விலாசடா
எட்டி கடாசடா
எட்டி கடாசடா
தட்டும் தோள் தட்டி நீ
சுற்றி வாள் வீசடா
பீதியே உன்னிடம்
பேயென மாறிடும்
பேதை அறியாமை
நாகமாய் சீறிடும்
சாமி மேல் நம்பிக்கை
வந்திடும் சென்றிடும்
நம்பிக்கை சாமியாய்
கொள்வதே வென்றிடும்
சத்தம் இடுவதும்
கத்தி தொலைப்பதும்
சஞ்சலத்தால் வரும் நோய்கலடா
சக்தியை உன்னிலே
பத்திரமாய் தினம்
பொத்திவை போய் விடும் பேய்கலடா
புத்தி இல்லாததே
சக்தி இல்லாதது
அங்கு உண்டாகிடும் அச்சமடா
நெஞ்சில் துணிந்திடு
வென்று நடந்திடு
நிச்சயம் உன் வழி உச்சமடா
ஹேய்ய்ய்