Adhikaalai

Adhikaalai Song Lyrics In English


அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா

உன்னை வந்து பாராமல்
தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும்
தூக்கம் இல்லையே

ஒரு பாரம் உடை மீறும்
நிறம் மாறும் கனியே
இதழோரம் அமுதூறும்
பரிமாறும் இனியே
அடி தப்பி போகக்கூடாது

அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது


தென்றல் வந்து தீண்டினால்
இந்தத் தளிர் என்ன
தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை
ஒரு விடை சொல்லுமா

என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்
ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும்
சாரம் போகுமா

இளங்கோதை ஒரு பேதை
இவள் பாதை உனது
மலர் மாலை அணியாமல்
உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

இருவர் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது