Adi Aatha Aatha |
---|
கந்தனுக்கு ரெண்டு
கண்ணனுக்கு ரெண்டு
எந்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி உண்டு
கேட்டுக்கடி ஆத்தா பாத்துக்கடி ஆத்தா
கோவிக்காம என்ன ஏத்துக்கடி ஆத்தா
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
சாமந்தி பூ ஒண்ணு பூத்தா
அதை சுத்தாதோ பொன் வண்டு பார்த்தா
ஒண்ணோடு இன்னொன்னு சேர்த்தா
தப்பு என்னான்னு கேக்குறேன் ஆத்தா
பொண்டாட்டி ரெண்டானா
திண்டாட்டம்தானா
என்னத்த நான் பண்ணட்டும்
அட அந்தண்டை இந்தண்டை
எங்கேயும் சண்டை
யார் பக்கம் நான் சேரட்டும்
பூனைக்கும் தோழன்
பாலுக்கும் காவல்
ஆண் ஜாதி அதுதாண்டி ஆத்தா
அந்த அர்ஜுனன் பண்ணாத கூத்தா
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்
ஆசைகள் வீசுது காத்தா
அதுல ஆடுது என் நெஞ்சம் நாத்தா
மோகம்தான் பொங்குது ஊத்தா
அதை உணராம உதைக்காதே ஆத்தா
ஒரு ஜோடி மாட்டுக்கு
ஏர்க்காலு ஒன்னு
அறியாயோ நீ தங்கமே
ஓடுற ஆத்துக்கு இரு கரை உண்டு
தெரிஞ்சும் ஏன் ஆதங்கமே
அடி நீதான்டி மூத்தா
நான் ஒண்ணு சேர்த்தா
ஒரு மோகம் குறையாது ஆத்தா
உன் அழகில் ரதி கூட தோத்தா
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்
அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா