Aey Vennila

Aey Vennila Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஏ வெண்ணிலா
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

வெண் நீல மேகம் எங்கோ
தேரில் காதல் ஊர்கோலம்
இன்பங்கள் காணும் நேரம்
எல்லாம் அந்த கார்காலம்

பூமலர் மஞ்சம்
உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே
நாணமோ கெஞ்ச ஆசை
கொஞ்ச நானும் நின்றேனே
என் தேவனே

ஏஏஎன் தேவி உன்னோடு வாழும்
நன்னாளை நான் காண வேண்டும்

ஏ வெண்ணிலா
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்





கண்ணென்ற வாசல்தேடி
நெஞ்சில் வந்த பெண்மானே
கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே
இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம்
என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம்
என் வாழ்விலே

ஆஆஎன் வாழ்வு உன்னோடு சேரும்
என் ஜீவன் உன்னோடு போகும்

ஏ வெண்ணிலா
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

உனை நான் தொடருவேன்
தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும்
பூமேகம்தானே