Agap Porula |
---|
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
பூச்செடி நீயானால்
உன் வேர் என நான் இருப்பேன்
சூரியன் நீயானால்
உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பசி தூக்கம் யாவுமே மறக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
ஆகாயம் ஒரு வீடு
அந்த நிலவு நமது கூடு
பூவான உன் தேகம்
அதை பூட்டி வைத்தால் பாவம்
இவள் வாசனை கண்டு
உன் வயத்தை கிண்டும் வண்டு
நீ நானென என மாறினால்
இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
தாமரை இலை மீதிலே
மனம் தண்ணீர் போல தூங்காது
வாழ்கிற நாளிலே
சொர்க்கம் கண்டேனே இன்று
பூஜையில் பூஜையில்
பூவை தின்று எனை மென்று
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
கம்பன் வீட்டினில் உள்ள
ஒரு கவிதை ஓலை நீதான்
உன் தோளில் தினம் தூங்கும்
ஒரு குழந்தை போல ஆனேன்
என்னை நீ கிள்ளும் போது
நான் உன் பேர் சொல்லி அழுவேன்
உன் கண்களில் இமை யாவுமே
என் கண்ணை வந்து கொத்தாதோ
கண்களில் உள்ள பார்ப்பதா
அது காதல் என்று கத்தாதோ
உன்னை நான் உன்னை நான்
ஊட்டி விடவேண்டும் என்பேன்
உன்னை நான் உன்னை நான்
வாயை வாயாலே தின்பேன்
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
பூச்செடி நீயானால்
உன் வேர் என நான் இருப்பேன்
சூரியன் நீயானால்
உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பசி தூக்கம் யாவையும் மறக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே