Aiya |
---|
ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித் துணையும் என்னை கடக்க
அடஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
ஓஓஒஓஒஓஓ
மாலை சூடிய நாள் முதல்
தலைவா நான் உந்தன் கால் நிழல்
போலே நாளும் நடந்தேனே
தூக்கம் நீங்கிடும் வேளையில்
தினமும்தான் அதிகாலையில்
நான் உன் முகத்தில் விழித்தேனே
நீ இல்லையேல் நிழல் இல்லையே
நீ மட்டும் வானகம் போவதா
நாம் வாழ்ந்ததும் நலம் கண்டதும்
நீர்க் கொண்ட கோலங்கள் ஆவதா
உனைப்போல் தர்மசீலன் தான்
பிரிந்தால் உள்ளம் தாங்காது
கண்ணீரைக் காலம் மாற்றாதா
ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித்துணையும் என்னை கடக்க
அடஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா