Amma Endralle |
---|
இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஹாஆஆஆ
ஹாஆஆஆ
ஹாஆஆஆ
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ
யாரோ யார் யாரோ என்றே
தாயும் சேய்யும் இருப்பாரோஓ
விடையே இல்லாமல்
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
தெய்வமும் நீயும்
உண்மைகள் பேச
ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்
நீ கொண்ட சோகம்
நீ கொண்ட மௌனம்
தீர்ந்திடும் நாள் வருமே
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஹாஆஆஆஆ
ஆஆ
ஹாஆஆஆஆ
ஆஆ
சேய் குரல் கேட்டால்
தாய் உயிரோடு
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்
யாரும் இல்லா வெறுமை
மண்ணில் நுண் உயிர்கூட
தன்னுயிர் தந்த
தாய் உயிர் தேடாதா
அம்மா உன் மடியோடு
என் தழை சாய்ந்தால்
மாய்வதில் ஓர் சுகமே
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ