Amma Sonna |
---|
ஆண் 1 : சின்ன உயிரின் உடல்வளர
மடி தந்து
கண்ணின் மணிபோல்
காக்கத் தனைத்தந்து
அன்பின் உருவாய்
மண்ணில் இருப்பது யார்
அம்மாஅம்மா
ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 1 : வீணை என்ன குழலும் என்ன
கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன
அன்னை அன்பின் முன்னே ஹோய்
ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 1 : காதல் சுமை கணவன் சுமை
குடும்பச்சுமை தாங்குவாள்
காலமெல்லாம் கன்னியர்க்கு
ஓய்வு உண்டோ
சுமைகளெல்லாம் சுமப்பதிலே
சுகமிருக்கும் பெண்ணுக்கு
சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை
சொல்லிடவோ
ஆண் 1 : கைபிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்
கண்மணிக்கு இமை போல காவல் இருப்பாள்
அன்னையென ஆனாள்
தன் பிள்ளைக்கென குழைவாள்
ஆண் 1 : அன்னையென ஆனாள்
தன் பிள்ளைக்கென குழைவாள்
மண்ணில் உண்மையிலே உயர்ந்த
ஜென்மம் பெண் ஜென்மமே
ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 2 : காற்றினிலே கலந்துவரும்
கார் குயிலின் கானம்போல்
காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த
தூய நிலா ஒளியைப்போல்
பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ண விழி
ஆண் 2 : சிதறி வரும் சிரிப்பில்
முத்துத் தெறிக்கும்
சிரிக்கும் அந்த வெள்ளி மீன்
உள்ளம் பறிக்கும்
ஏங்குதம்மா நெஞ்சம்
ஏந்திக் கொண்டு பாட
ஆண் 2 : ஏங்குதம்மா நெஞ்சம்
ஏந்திக் கொண்டு பாட
கையில் என்று வரும்
பிள்ளைநிலா நீ கூறடி
ஆண் 2 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 2 : வீணை என்ன குழலும் என்ன
கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன
அன்னை அன்பின் முன்னே ஹோய்
ஆண் 2 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி