Amma Unathu Arputhangal

Amma Unathu Arputhangal Song Lyrics In English





அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

தொண்டன் ஒருவன் தையல் கலைஞன்
திருவாரூரில் வாழுகின்றான்
அவன் மருவத்தூர் அன்னை வரைபடம் தன்னை
சுவரில் மாட்டி வணங்குகின்றான்

அதில் குங்குமம் தினமும் வழியுதம்மா
அவன் குடிசை கோயிலாய் விளங்குதம்மா
அங்கு கிண்ணத்தில் தீர்த்தம் கிடைக்குதம்மா
அது குறையா இன்னமும் சுரக்குதம்மா

அம்மாஉனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்



தலைவனை பிரிந்த தலைவி ஒருத்தி
தனிமரமாக வாழ்ந்திருந்தாள்
தன் திருமண உறவு முடியும் முன்னாலே
தன்னுயிர் முடிக்க வழி வகுத்தாள்

அவள் சோதரி வந்து தடுத்து நின்றாள்
அன்னை சக்தியை போற்றி துதிக்க சொன்னாள்
மங்கை மந்திர நூலை தினம் படித்தாள்
மனம் மாறிய கணவனை கரம் பிடித்தாள்

அம்மாஉனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

நல்லாட்சி புரியும் நாயகி லீலை
பொள்ளாச்சி நகரில் நடந்ததம்மா
ஒரு நல்லவர் பாதம் நோய் வசமாகி
துண்டிக்கும் நிலையில் கிடந்ததம்மா

அவர் மங்கல மனைவி வாடி நின்றாள்
மேல் மருவத்தூர் தாயிடம் வேண்டிக் கொண்டாள்
அன்னை செவ்வாடை புனைந்து நேரில் வந்தாள்
ஓர் செவிலித்தாய் போலே நோய் தீர்த்தாள்
பில்லி சூனியம் செய்த தகடெடுத்தாள்

அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்