Anangan Angagan Anban |
---|
வசனம் :
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம் வழங்கும்
உன் புகழ் சொல்லவா
கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்
மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
குணம்கொள் பெண் அனங்கே
உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
மன்னா வா
கண்ணே வா
நீ வா
வாஆ
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா