Anbethan Thayanadhu |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஸாகமபா
ஸாகமபா
கமபநி
கமபநி
கமபநிஸ நிபம
கமபநிஸ நிபம
பமகஸ பமகஸ
நல் அன்பேதான் தாயானது
நல் அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அனைவரும் : அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது
கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை
எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்
பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா
எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே
அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே
அந்த அன்பை வணங்கி மகிழலாம்
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது