Annai Madiyil Female |
---|
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
உறவை உயிராய் நினைந்து
வருவாய் திருவாய் மலர்ந்து
கண்கள் பொங்குமே நீர் நிறைந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
மலர்கள் மாறலாம் நதிகள் மாறலாம்
மண்ணும் மாறலாம் மகனே
மனித ஜாதியின் உறவு என்பதில்
மாற்றம் இல்லையே மகனே
தோளில்தானடா தூளிக் கட்டிக் கொண்டேன்
சொந்தம் என்று நான் மார்பில் இட்டுக் கொண்டேன்
பாச மழையிலே நாம் நனைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து