Annam Pola Nadanthu |
---|
அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ
ஹோய் ஹோய்
காதலித்து கைப் பிடித்த கணவரென்றாலும் கட்டில் பக்கம் செல்லும்போது நாணம் வந்ததா நாணம் வந்து நாணல் போல நின்ற உன்னையே நம்பி வந்து கையில் அள்ளி கட்டிலிட்டாரா
சீ சீ சும்மா போங்கடி பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல
அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோஹான் அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ
கூந்தல் என்ற குளத்துக்குள்ளே மீன் பிடித்தாரா குறும்புக்காரன் தூண்டிலிலே நீ விழுந்தாயா சாந்தி என்ற முகூர்த்தத்தில் சாந்தியானதா சங்கமத்தில் இங்கிதங்கள் இன்பமானதா
அய்யோ விடுங்கடி என்ன பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல
ஹோய்
போதுமென்று சொல்ல முடியா புதிய பாடமோ படிக்க படிக்க முடியாத இனிய கவிதையோ ஆத்தோரம் மாணவியும் அறியும் கலையிது ஆனந்தம் பரிமாறும் அமரக் காவியம்
நாளைக்கு உங்களுக்கும்தான்டி நடக்கும் அய்யோ விடுங்கடி என்ன பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல
அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ
லாலி லாலி லலிலோ லாலி லாலி லலிலோ லலல்லலல் லா லாலி லாலி லலிலோ லாலி லாலி லலிலோ லலல்லலல் லா