Annam Pola Nadanthu

Annam Pola Nadanthu Song Lyrics In English




அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ

ஹோய் ஹோய்

காதலித்து கைப் பிடித்த கணவரென்றாலும் கட்டில் பக்கம் செல்லும்போது நாணம் வந்ததா நாணம் வந்து நாணல் போல நின்ற உன்னையே நம்பி வந்து கையில் அள்ளி கட்டிலிட்டாரா

சீ சீ சும்மா போங்கடி பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல

அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோஹான் அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ

கூந்தல் என்ற குளத்துக்குள்ளே மீன் பிடித்தாரா குறும்புக்காரன் தூண்டிலிலே நீ விழுந்தாயா சாந்தி என்ற முகூர்த்தத்தில் சாந்தியானதா சங்கமத்தில் இங்கிதங்கள் இன்பமானதா


அய்யோ விடுங்கடி என்ன பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல

ஹோய்

போதுமென்று சொல்ல முடியா புதிய பாடமோ படிக்க படிக்க முடியாத இனிய கவிதையோ ஆத்தோரம் மாணவியும் அறியும் கலையிது ஆனந்தம் பரிமாறும் அமரக் காவியம்

நாளைக்கு உங்களுக்கும்தான்டி நடக்கும் அய்யோ விடுங்கடி என்ன பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல பொண்ணு ஓடுறா புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல அவ விடிய விடிய தூங்கல விடிய விடிய தூங்கல

அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ

லாலி லாலி லலிலோ லாலி லாலி லலிலோ லலல்லலல் லா லாலி லாலி லலிலோ லாலி லாலி லலிலோ லலல்லலல் லா