Annamae |
---|
அன்னமேஏ
ஏன் அழகைத் தேடுகிறாய்ஆய்
சிறகின் வெண்மைக்குள்ளே
பிறரின் பார்வைக்குள்ளேஏ
அழகை கொண்டு ஏனோ
அழகைத் தேடுகின்றாய்
பேதையேஏ
உன் மனதின் குழியில்
ஊறிடும் அழகை நீ
பார்த்திட மறந்தாய்
அன்னமேஏஏஏ
ஆற்றிலே காற்றிலே
நீந்திய நீயோ
கூண்டினில் அடைபட வந்தாயாஆ
வேறொரு பறவை
போல் உனை மாற்ற
கண்ணீரை விலை தந்தாயாஆ
எங்கே உந்தன் இன்பம்
எதற்கோ இந்த கோலம்
அழகைத் தேடிக் கொண்டே
கரையும் இந்தக் காலம்
அன்னமேஏஏ
உன் கன்னங்கள் தாண்டி
வீழ்ந்திடும் நீரில்
நீந்துகிறாயோ
அன்னமேஏஏஏ