Antha Sivagami

Antha Sivagami Song Lyrics In English


ஆஆஆ
ஆஆஆ

அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி

வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி

அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி

கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே

நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி




மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம்


நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ

காலம்
மாறினால் காதலும்
மாறுமோ

மாறாது
மாறாது இறைவன்
ஆணை

ஆண் & என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை

இந்த சிவகாமி
மகனுடன்
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி



அந்த சிவகாமி
மகனிடம்
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி