Arthamulla Indhu Madham |
---|
பாடலாசிரியர் : வாலி
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது அதுதான் அள்ளியிட நெருப்பை இங்கே மூட்டி வைத்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
தருமம் உனைத் தேடி உன் தாரம் என்று வந்தது தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது தருமம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது
தன் தலையில் உன் பழியைத் தாங்கிக் கொண்டு நின்றது தாங்கும் வரை தாங்கி விட்டு தாளாமல் சாய்ந்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள் உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள் தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது