Bhoomikkum Saamikkum

Bhoomikkum Saamikkum Song Lyrics In English


பாண்டியனார் சீமையிலே
பாடுபட்ட பூமியிலே
பாலாறும் தேனாறும்
பெருக்கெடுத்து ஓடுதடி
போட்டதெல்லாம் மொளச்சதடி
பொன்மணியா வெளஞ்சதடி
கேட்டதெல்லாம் கெடச்சதடி
கதிர் கதிரா குலுங்குதடி

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

உள்ள முதல் விவசாயம்
நமக்கு அள்ளித் தரும் ஆதாயம்

மூணு மழை கேட்டாலும்
நமக்கு கொட்டுமடி ஆகாயம்

அன்றாடம் ஒழச்சா எல்லாரும்
அம்பாரம் போலே நெல் சேரும்

பட்டதுக்கு பலன் ஆச்சு
வெத நட்டதிங்கு பவுன் ஆச்சு

இருவர் : மண்ணை நம்பி நாமிருக்க
நம்மை நம்பி நாடிருக்க
ஏத்தம் போடு ஏத்தம் வரும்
வாழ்வில் நமக்கு

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி


பெண் பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி
தந்தானத் தந்தானத் தந்தா

பாண்டவர்கள் அஞ்சு பேரு
அதில் தர்மனுக்கு நல்ல பேரு

தர்மரைப் போல் இங்கு யாரு
அது கண்களுக்குத் தெரியாது

பெண் எந்நாளும் ஏழைத் தொழிலாளி
கொண்டாடும் எங்க மொதலாளி

ஆண் தர்மருக்கு நிகராகும்
மனம் தங்கமுன்னா நெசமாகும்

இருவர் : கள்ளப் போல பாலிருக்கும்
பாலப் போல கள்ளிருக்கும்
பாறைக்குள்ள ஈரம் போல
உண்மை இருக்கும்

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி
தந்தானத் தந்தானத் தந்தா