Brahman Thalam Poda |
---|
பிரம்மன் தாளம் போட மால் படகந்தனை முழக்க
பேராம் வாணி அருமையாம் வீணை கொள
சீர்ங்குழலி ரவி சசியும் அடைவாயூத
கிருபையுடன் தேவர் ஒலி செய்ய
நந்தி மத்தளம் சங்கீதத்தைத்
தும் புரு முழங்க ரசம் பிறக்க
சிவநாடும் நடனத்தைப் போற்றுவேனேஏஏ
ஆஅஆஆஆ
அபிநயங்கள் காட்டியே
நீ ஆடலாமோ போட்டியே
சபையில் பாவராக தாளம்
லாஸ்யமோடும் தாண்டவம்
இவை கலந்து நடனமாடத் தெரியுமா
நீ இலாவகமாய் நடைகள் போட முடியுமா
தகதிமி என்னும் நான்கு அட்சரம்
தாளமிதன் பேர் சதுஸ்ரம்
தகுந்த லயமொடு ஆடுவதற்கு
நிதானமும் ஞானமும் அவசியம்
ஐந்து நடைகளில் ஆதி தாளமாய்
அமைந்தது சதுஸ்ரம் தானம்மா
அடுத்த நடைகளை வரிசை முறையிலே
ஆட உனக்குத் தெரியுமா
தகிட மூன்று அட்சரம்
இது தாளவாத்ய சாஸ்திரம்
தகுதியோடு தேர்ந்தவர்கள்
தந்த பெயர் திஸ்ரம்
தகிட தகதிமி பழகு நடையினில்
தவழ வருவது ஏழு அட்சரம்
மகிழும் மனதொடு மதுர ஒலியொடு
சகல கலைஞரும் புகழும் மிஸ்ரம்
தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்
சுகமுடைய நடையின் பெயர்
சொல்லுவது கண்டம்
தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்
தகதிமி தகதகிட ஒலியொடு நடனமிடும்
தனியொரு நடையின் பெயர்
அழகிய சங்கீர்ணமே
முகமொடு விழகரமும்
நவரச நயம் மிளிர
முறையொடு நடனமிடத்
திறம் மிக வேணுமே
ஆயிரம் நாட்டியம் ஆடிய போதிலும்
ஓவிய நாட்டியம் தெரியுமாஆஅ
சித்திர நந்தனம் எத்தனை வேண்டும்
சிம்ம நந்தனம் ஆடட்டுமா
சிம்ம நந்தனம் ஆடிடு முன்னே
மயூர பந்தனம் செய்யட்டுமாஆ
மயூர பந்தனம் செய்யட்டுமாஆ
இருட்டிலும் தணல் போலே
இருவிழி ஜொலிக்கும்
இடி இடித்தாற் போலே
கர்ஜனை முழங்கும்
அழகிய கழுத்தினை
லயமுடன் ஆட்டும்
ஆயிரம் விழிகளைத்
தோகையில் காட்டும்
குறுகிய கொடி இடை
மங்கையைப் பழிக்கும்
கோபத்தின் கொதிப்பாலே
பிடரியைச் சிலிர்க்கும்
செழும் பசும்பொன் போலே
மின்னிடும் தோற்றம்
சிங்காரமாகவே நடையெழில் காட்டும்
சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்
சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்
மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்
மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்