Buddan Yesu |
---|
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக
கேள்விக்குறி
போல் முதுகு வளைந்து
உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென
எண்ணி பிழைக்கும் நமக்காக
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு பகை
வந்தபோது துணை ஒன்று
உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது
என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை
வருவது நம்பிக்கை ஒளியாகும்
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
பொருள் கொண்ட
பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள்
வந்ததில்லை
மனம் என்ற
கோயில் பிறக்கின்ற
நேரம் அழைக்காமல்
அங்கே தெய்வம் வந்து
சேரும்
அழுதவர் சிரிப்பதும்
சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவனுக்கென்றே
உள்ளது எல்லாம் இறைவனும்
தந்ததில்லை
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக