Chella Pillai Saravanan |
---|
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனத்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்
செல்லப் பிள்ளை சரவணன்
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில் மலர் சூடியே அவன்
கூட நான் வர வேண்டுவான்
மயங்கி நான்
மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்
செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இன்பவல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
மாலையில் ஒரு மல்லிகை என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை
மன்மதன் கணை ஐவகை அதில்
ஓர் வகை இவள் புன்னகை
மடியில் நான்
துயில இடை துவள
கலை பயில
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கார்க்குழல் உந்தன் பஞ்சணை
இரு கைகளே உந்தன் தலையணை
வேலவன் கொஞ்சும் புள்ளி மான்
அதன் வடிவம் தான்
இந்த வள்ளி மான்
அருகில் நான்
அருகில் நான் வந்தேன்
இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்
ஆண் மற்றும்
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்