Chithirai Masathu |
---|
சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு
சித்திரை மாசத்து பூங்காத்து
சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
என்னை விழியால் ஒரு
வலை வீசி பிடித்தாயே
ஏக்கம் வரும் மாதிரி
எனை பார்த்ததும் சிரித்தாயே
காயம் தெரியாமல்
கண்களினால் எனை அடித்தாயே
கண்கள் சிவப்பேறிட
பெரும் போதையை கொடுத்தாயே
போதை அது தெளிய
வைத்தியம் இங்கிருக்கு
வைத்தியத்தை அறிய
வாலிபம் காத்திருக்கு
அட ராஜா உந்தன்
எண்ணம் போல நானும் நடப்பேன் ஹா
சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
டும்டும் டக்கு முக்கு
தாளம் போட்டுக்கிட்டு
சம்பா நெல்லு குத்து
டம்டம்டக்கு முக்குடும்டும்
கொட்டுக் கொட்டி
சந்தம் மெட்டுக் கட்டு
குஞ்சம் வச்சுப் பட்டு சேல கட்டு
மஞ்சள் வச்சு நல்ல மால கட்டு
டும்டும் டக்கு முக்கு தாளம் போட்டுக்கிட்டு
சந்தம் மெட்டுக் கட்டி பாட்டுக் கட்டு
லுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
மங்கை இதழோரத்து
மலைத்தேன் துளி பெறலாமா
கூந்தல் நிழலோரத்தில்
கதை பேசிட வரலாமா
இங்கு என்னைப் பார்த்த பின்
எதிர்க் கேள்விகள் எதற்காக
இந்த இளம் பூங்கொடி
ஆளானது உனக்காக
ஆசை என்னும் நெருப்பில்
தேகமும் காயுதடி
மோகம் என்னும் நதியில்
வெப்பமும் தீருமையா
அடி மோகம் தீர்க்கும் கங்கை
என்றும் நீ தானடி ஹேய்
சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள்
மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு
ஹே சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண் மற்றும்
முத்திரை போடுது பூமி இது