December Madhathu |
---|
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
தேனே திணை தேனே
இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே
தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்னஆ
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
மழை தூறிடும் நேரம் குடை பிடிக்க
மறந்திட வேண்டும்
அந்த தூறலில் நானும் உனை நினைத்து
நனைந்திட வேண்டும்
உந்தன் தோள்களில் சாய்ந்து
எனை மறந்து தூங்கிட வேண்டும்
அந்த தூக்கத்தில் காணும்
கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்
வண்ணம் மின்னும் கண்ணங்களில்
முத்தம் சிந்த வேண்டும்
பித்தம் தரும் எண்ணங்களை
ஒத்தி வைக்க வேண்டும்
சொல்லச்சொல்ல உள்ளம்
கொஞ்சம் மாறாதா
மெல்ல மெல்ல
கள்ளம் வந்து சேராதோ
டிசம்பர் மாதத்து பனித்துளியே
ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
இது காமனின் நேரம்
இரு மனது போர்க்களம் ஆகும்
வரும் மோகங்கள் யாவும்
அணைத்தவுடன் காவலை மீறும்
தினம் ராத்திரி நேரம்
உனைத்தழுவும் காற்றிடம் கேளு
அது ஏக்கத்தினாலே எனை மறந்து
நான் விடும் மூச்சு
கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
நெஞ்சுக்குள்ளே தைத்தேன்
சின்ன சின்ன வித்தைகளில்
பங்கு கொள்ள வைத்தேன்
யுத்தம் இன்றி
என்னை வென்ற மீனம்மா
சத்தம் இன்றி கைது
செய்தது ஏனம்மா
தேனே திணை தேனே
இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே
தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன