Dheena Dhayaabari Thaaye |
---|
தீனதயாபரி தாயே
தீனதயாபரி தாயே
அம்பா திருவாகும் உருவே
நீ அருள்வாய் தேவி
தீனதயாபரி தாயே
மாநிலமதில் நீயே கதிஈஈ
மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த
மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த
வகையேதும் அறியேன் கண் பாராய் தாயே
போதும் எனது துயர் போதும்
நான் சகியேன்
புவியில் அருள்வாய் சுகமே
போதும் எனது துயர் போதும்
நான் சகியேன்
புவியில் அருள்வாய் சுகமே
தீராத துயராகினேன்
நெஞ்சில் தீராத துயராகினேன்
துயர் தீர்ப்பாயோ ஐகன் நாயகி
நெஞ்சில் தீராத துயராகினேன்
இகமீது வினையே ஓர் உருவாகினேன்
யாரிடம் சொல்வேன் நான்
எனது மன வேதனை
யாரிடம் சொல்வேன் நான்
எனது மன வேதனை
ஆதரி அன்புடன் அன்னையே அருள்புரி
தீராத துயராகினேன்
கண்ணில்லா குழந்தையால்
கலங்குகின்றேனே
கண்ணில்லா குழந்தையால்
கலங்குகின்றேனே
காப்பதுவும் உனது
கடமை என்றேனே
காப்பதுவும் உனது
கடமை என்றேனே
எண்ணில்லா வேதனை எனக்கினி ஏனோ
எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே
எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே
மா மதிமுக விலாச
தருனி அதி விநோத மோகினி
மா மதிமுக விலாச
தருனி அதி விநோத மோகினி
வாழ்வில் இன்பமாய் வாழ்ந்திட செய்தருள்
வனிதையான உனையல்லாது வேறே
துணையுமேது இணையுமேது
திரிபுர சுந்தரி சுதந்தரி பைரவி
தாயே கதி நீயே