Dhooli Dhooli Manikka |
---|
ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ ஆரிராராரிராரிரோ
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
வெண்பனி தூங்க தன் இதழ் தூவி மல்லிகை பாய் விரிக்கும் அந்த மல்லிகை தூங்க கானக் குயிலும் ஆயிரம் பாட்டிசைக்கும்
வெண்மதி மெல்ல தூங்கிடு என வைகையும் தாலாட்டும் வைகையே கொஞ்சம் ஓய்வெடு என தென்றலும் சீராட்டும்
அன்ன சிறகில் மெத்தை விரித்தேன் மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
ஆயிரம் காலம் அன்னையும் செய்த பூஜையின் பலனாக ஒரு தங்கக்கிளி தத்தி வந்ததோ தாய்மடி விளையாட
தெய்வமே இன்று பிள்ளையாய் இங்கு வந்தது உறவாட தேன் தமிழ் சிந்தும் முல்லையாய் அன்னை தோள்களில் விளையாட
முல்லைப் பூவே முத்துச்சரமே மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
ஆரிராரி ராராரிராரி ஆராரிராரிரோ