Em Thandhai |
---|
சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்
விண்மீன்கள்
கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள்
குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும்
எம் அன்னையே
வீரத்தின் மகன் என்று
விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று
நடை சொல்லுமே
நிலையான மனிதன் என
வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இன்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகர் ஆகுமா
எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்திதான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும்
உன் கீர்த்திதான்
தலை முறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே
என் மூச்சுதான்
சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்