En Dheiva Veenaiye |
---|
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
திருக்கோவில் தீபங்கள்
இரு கண்கள் ஆகும்
ஒரு பார்வை நீ பார்த்தால்
உயிர் ஒன்று வாழும்
எனக்கென்று யாருண்டு
என் காதல் தேவி
இமைக்காது நீ போனால்
எனக்கேது ஆவி
எனக்கேது ஆவி
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
மருதாணி நான் பூச
வருகின்றபோதே
மலர்பாதம் பொன்னாக
சிவக்கின்ற மானே
நடந்தாலும் உன் பாதம்
புண்ணாகும் என்று
நடக்காமல் போனாயோ
கண்ணே நீ இன்று
கண்ணே நீ இன்று
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா