En Veetu Thotathil |
---|
ஓஓஓஒஓஓஓஒஹ்ஓஓஓஓஒஹ்
ஓஓஓஒஓஓஓஒஹ்ஓஓஓஓஒஹ்
ஓஓஓஒஓஓஓஒஹ்ஓஓஓஒஓஓஓஒஹ்
ஓஓஓஒஹ்ஓஓஓஒஹ்ஓஓஓஒஹ்
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா
உறவாட வந்தாயா துறவாட வந்தாயா
சொல்லம்மாஹோய்
ஏதோ விதியென்ற ஒரு சொல்லை
விடையாக தருமிந்த ஊரம்மா
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா
சுத்தி சுத்தி சுற்றம் உண்டு
சொந்தத்துக்கு யாருமில்ல
நூறு வேலி நஞ்சை உண்டு
தாலி வாங்க யோகமில்ல
ஓஓஓஹ்
பத்து புள்ள பெத்துக் கொள்ள
பாவி மக ஆசப்பட்டா
கடைசியிலே பொட்டப்புள்ள
காவிக்குத்தான் வாக்கப்பட்டா
சொந்த ஜாதி சனமும் சக்தி இல்லாம
அழுதாச்சுஹோய்
இந்த சாபத்த தீர்க்கும் சாமிக்கும்
பாவம் வயசாச்சு
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா