Enakku Oru Magan |
---|
கூவா கூவா கூவா கூவா
கூவா கூவா கூவா கூவா
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்ஆஅஆ
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ
ஓஓஒ
கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ
ஓஓஒஓஒஓஒ
தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
ஒஓஒ
தேனிசைக் குழல் ஊதும்
சிறு கண்ணனோ
சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு
நல்ல வழி என்றும் வாழ்வான்
வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு
உள்ளத் துணிவோடு ஆள்வான்
இல்லை எனும் வார்த்தை இல்லை
என்று செய்வான் என் பிள்ளை
தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக
திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை
நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை
தாலாட்ட வேறாரும் தேவை இல்லை
தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை
இசையில் பல நாட்டை
இழுத்து வசம் ஆக்கும்
இளையராஜாவைப் போலே
திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி
ஏறி வருவானே மேலே
போற்றி நான் பெற்ற செல்வம்
மாற்றுக் குறையாத தங்கம்
சேர்த்து புகழ் மாலை
சூட்டி புவி யாவும்
ஜெய கொடி பறந்திட
திருமகள் அருள் துணையுடன்
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்ஆஅஆ
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்